Please enable javascript.TNPSC Group 1 Examination Hall Ticket டிஎன்பிஎஸ்சி : குரூப் 1 தேர்வு - ஹால் டிக்கெட் வந்துருச்சா? முக்கிய அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி : குரூப் 1 தேர்வு - ஹால் டிக்கெட் வந்துருச்சா? முக்கிய அறிவிப்பு!

Authored byமரிய தங்கராஜ் | Samayam Tamil 3 Jul 2024, 10:11 pm
Subscribe

குருப்-1 முதல் நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

tnpsc
அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு லட்சக்கணக்கான இளைஞர்கள் தீவிரமாக படித்து வருகின்றனர். பயிற்சி மையங்கள் மூலமாகவும், தனிப்பட்ட வகையிலும் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிடும் அனைத்து அறிவிப்புகளையும் தேர்வுக்கு தயாராகுவோர் தவறவிடுவதில்லை.

இந்நிலையில் குரூப் 1 முதல் நிலைத் தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக , அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNPSC) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், குரூப்-1 பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூலை 13ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வு மைய அனுமதிச் சீட்டு தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களின் ஒடிஆர் வாயிலாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வு மைய அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

என்னென்ன பணிகள்?

தற்போது நடத்தப்படும் இந்த குரூப் 1 தேர்வின் மூலம் வருவாய் கோட்டாட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் ஆகிய பதவிகளில் 90 காலியிடங்கள் நேரடியாக நிரப்ப்பட்ட உள்ளன.

குரூப் 4 தேர்வு!

கடந்த ஜூன் 9ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் குரூப் 4 தேர்வை நடத்தியது. தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் உள்ள 6624 குரூப் 4 காலியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் நடந்த 10 ஆம் வகுப்பு கல்வி தகுதி கொண்ட குரூப் 4 தேர்வை 15.8 லட்சம் பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மரிய  தங்கராஜ்
எழுத்தாளர் பற்றி
மரிய தங்கராஜ்
காட்சி தொடர்பியல் துறை பட்டதாரி. சினிமா, அரசியல் சார்ந்து எழுதுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். டிஜிட்டல் ஊடகத்தில் ஆறு ஆண்டுகள் அனுபவம். தமிழ் சமயம் ஊடகத்தில் சீனியர் டிஜிட்டல் கண்டட் புரொடியூசராக அரசியல் சாந்த செய்திகள், கட்டுரைகளை கடந்த மூன்றாண்டுகளாக எழுதி வருகிறார்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்