சூர்யா தற்போது தான் சிவாவின் இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்ச்செலவில் உருவாகும் திரைப்படம் தான் கங்குவா. சூர்யாவிற்கும் சிவாவிற்கும் தற்போது கட்டாயம் ஒரு வெற்றி தேவை என்பதால் கங்குவா அந்த வெற்றியை பெற்று தரும் என்ற எதிர்பார்ப்பு சூர்யா ரசிகர்களிடம் இருந்து வருகின்றது.
கடைசியாக சூர்யாவின் நடிப்பில் ஒரு படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவரை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல கங்குவா படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. இதையடுத்து கங்குவா திரைப்படம் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதே ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் வெளியாகின்றது. இருந்தாலும் கங்குவா படத்தின் மீதுள்ள நம்பிக்கையில் படக்குழு வேட்டையன் திரைப்படத்துடன் கங்குவா படத்தை வெளியிட துணிந்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா 44 என அழைக்கப்பட்டு வரும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. குறிப்பாக சூர்யாவின் கெட்டப் செமையாக இருப்பதாக ரசிகர்கள் கூறினார்கள்.
இப்படத்தின் அறிவிப்பு வீடியோவை பார்க்கும்போது இப்படம் 80 காலகட்டங்களில் நடக்கும் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்றே தெரிகின்றது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பிற்கு சூர்யா இரண்டு மணி நேரம் தாமதமாக வருவதாக தகவல்கள் வருகின்றன. அதற்கு காரணம் என்ன என்பது பற்றியும் தற்போது தகவல் கிடைத்துள்ளது.
அதாவது சூர்யா இப்படத்தில் கேங்ஸ்டராக நடிக்கின்றார்.அதன் காரணமாக அவர் உடல் செம பிட்டாக கட்டுமஸ்தாக இருக்க வேண்டுமாம். எனவே தினமும் காலை குறைந்தது இரண்டு மணி நேரமாவது அவர் உடற்பயிற்சி செய்து வருகின்றார். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஜிம் இல்லையாம். எனவே ஒரு மணி நேரம் ட்ராவல் செய்து ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்துவிட்டு சூர்யா படப்பிடிப்பிற்கு வருகிறாராம்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
எனவே தான் படப்பிடிப்பு தளத்திற்கு சூர்யா இரண்டு மணி நேரம் தாமதமாக வருவதாக தகவல்கள் வருகின்றன. அதற்குள் சூர்யா இல்லாத மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சியை கார்த்திக் சுப்புராஜ் படமாக்கி வருகிறாராம். ஆனால் இத்தகவல் உண்மையா ? இல்லை வதந்தியா ? என்பது தெரியவில்லை. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள், இரண்டு மணி நேரம் ட்ராவல் பண்ணி ஜிம்முக்கு போறாரா ? அப்போனா வெறித்தனமான ரோலா இருக்கும் போலயே என பேசி வருகின்றனர்
கடைசியாக சூர்யாவின் நடிப்பில் ஒரு படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவரை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல கங்குவா படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. இதையடுத்து கங்குவா திரைப்படம் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதே ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் வெளியாகின்றது. இருந்தாலும் கங்குவா படத்தின் மீதுள்ள நம்பிக்கையில் படக்குழு வேட்டையன் திரைப்படத்துடன் கங்குவா படத்தை வெளியிட துணிந்துள்ளது.
இப்படத்தை தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா 44 என அழைக்கப்பட்டு வரும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. குறிப்பாக சூர்யாவின் கெட்டப் செமையாக இருப்பதாக ரசிகர்கள் கூறினார்கள்.
இப்படத்தின் அறிவிப்பு வீடியோவை பார்க்கும்போது இப்படம் 80 காலகட்டங்களில் நடக்கும் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்றே தெரிகின்றது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பிற்கு சூர்யா இரண்டு மணி நேரம் தாமதமாக வருவதாக தகவல்கள் வருகின்றன. அதற்கு காரணம் என்ன என்பது பற்றியும் தற்போது தகவல் கிடைத்துள்ளது.
அதாவது சூர்யா இப்படத்தில் கேங்ஸ்டராக நடிக்கின்றார்.அதன் காரணமாக அவர் உடல் செம பிட்டாக கட்டுமஸ்தாக இருக்க வேண்டுமாம். எனவே தினமும் காலை குறைந்தது இரண்டு மணி நேரமாவது அவர் உடற்பயிற்சி செய்து வருகின்றார். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஜிம் இல்லையாம். எனவே ஒரு மணி நேரம் ட்ராவல் செய்து ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்துவிட்டு சூர்யா படப்பிடிப்பிற்கு வருகிறாராம்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
எனவே தான் படப்பிடிப்பு தளத்திற்கு சூர்யா இரண்டு மணி நேரம் தாமதமாக வருவதாக தகவல்கள் வருகின்றன. அதற்குள் சூர்யா இல்லாத மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சியை கார்த்திக் சுப்புராஜ் படமாக்கி வருகிறாராம். ஆனால் இத்தகவல் உண்மையா ? இல்லை வதந்தியா ? என்பது தெரியவில்லை. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள், இரண்டு மணி நேரம் ட்ராவல் பண்ணி ஜிம்முக்கு போறாரா ? அப்போனா வெறித்தனமான ரோலா இருக்கும் போலயே என பேசி வருகின்றனர்