Please enable javascript.TamilNadu Weatherman Rain update: ரோகித்துக்கு டஃப் கொடுத்த நுங்கம்பாக்கம்.. ஃபாஸ்ட்டஸ்ட் 50.. தமிழ்நாடு வெதர்மேன் அசத்தல் அப்டேட்!

ரோகித்துக்கு டஃப் கொடுத்த நுங்கம்பாக்கம்.. ஃபாஸ்ட்டஸ்ட் 50.. தமிழ்நாடு வெதர்மேன் அசத்தல் அப்டேட்!

Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil 4 Jul 2024, 9:08 am
Subscribe

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு வெளுத்து வாங்கிய மழையால் இதமான சூழல் நிலவி வருகிறது. சென்னையில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழையில் பெரும்பாலும் நேற்று இரவு கொட்டித்தீர்த்து விட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Tamilnadu Weatherman

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பகல் பொழுதில் வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனால் கடுமையான புழுக்கமும் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று இரவு குளிர்ந்த காற்றுடன் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது.

இடி மின்னல் என வெளுத்து வாங்கிய மழையால் திடீரென வானிலை மாறி இதமான சூழல் நிலவியது. விட்டுவிட்டு கொட்டித் தீர்த்த மழையால் சென்னை வளசரவாக்கம், வடபழனி, கோடம்பாக்கம், போரூர் உட்பட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

திருப்பதி பக்தர்களுக்கு இனி அந்த கவலையே வேண்டாம்.. தேவஸ்தான நிர்வாகம் அதிரடி!

சாலைகளிலும் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர். இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் மழை குறித்து தனயார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜூலை மாதத்தில் பெய்ய வேண்டிய மொத்த மழையின் அளவு மற்றும் அதில் பெரும்பாலான மழை நேற்று ஒரு மணி நேரத்திலேயே சென்னை பெற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஜூன் மாதம் 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் தான் மழைப்பொழிவு மிகுந்த ஈரமான மாதமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏதோ தப்பா நடக்குது.. அதான் அண்ணாமலை இந்த முடிவு எடுத்துருக்கார்.. அப்செட்டில் பாஜக தொண்டர்கள்!

மேலும் மழை குறித்து பல்வேறு தகவல்களையும் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இன்று மிஸ் ஆகாது!!! காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் ஜூலை மாத டமால் டுமீல் தொடக்கம் என குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியதை போலவே நேற்று இரவு மிஸ் ஆகாமல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டியது.



கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரம் வரை உள்ள KTCC முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மோசமான இடியும் உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார். உக்கிரமான மழை மேகங்களை சிவப்பு தக்காளி என குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு வெதர்மேன் அவை தென் சென்னை புறநகர் பகுதிகளில் காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். நுங்கம்பாக்கம் ரோகித்தின் WC T20 சாதனைகளை சமன் செய்துள்ளது.

வெளிநாடு செல்லும் அண்ணாமலை.. செல்லூர் ராஜூ என்ன சொல்லி வாழ்த்தியிருக்கார் பாருங்க!

அதிவேகமாக 50 அடித்துள்ளது. நுங்கம்பாக்கத் 30 நிமிடங்களுக்குள் 50 மிமீ அடித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இங்கே இப்படின்னா ரெட் தக்காளி ஏரியாவில் எப்படி இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்னையில் ஜூலை மாதத்திற்கான மொத்த மழையே 100 மிமீ தான் என்றும் ஆனால் நேற்று இரவு ஒரு மணிநேரத்தில் 60 மிமீ மழை பெய்து விட்டது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதம் மழைப்பொழிவு நிறைந்த மாதமாக இருந்தது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவவித்துள்ளார்.
பஹன்யா ராமமூர்த்தி
எழுத்தாளர் பற்றி
பஹன்யா ராமமூர்த்தி
செய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்