வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் நிக்கோலய் சச்தேவுக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனக்கு நடந்த நல்ல விஷயத்தை ரசிகர்களுக்கு அறிவித்தார் வரலட்சுமி.
அந்த புகைப்படங்களை பார்த்து பலரும் வரலட்சுமியை வாழ்த்திய நிலையில் சிலரோ நிக்கோலய் சச்தேவின் உருவத்தை கேலி செய்தார்கள். அதை பார்த்த வரலட்சுமி என் கண்களுக்கு நிக்கோலய் மிகவும் அழகாக தெரிகிறார் என கூறி தன் வருங்கால கணவரை உருவக்கேலி செய்தவர்களுக்கு நெத்தியடி கொடுத்தார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்
வரலட்சுமியை மணமகளாக பார்க்க அவரின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. ஜூலை மாதம் 2ம் தேதி நிக்கோலய் சச்தேவின் மனைவியாகிறார் வரலட்சுமி என தகவல் கிடைத்திருக்கிறது.
தங்களின் திருமணம் டெஸ்டினேஷன் வெட்டிங்காக இருக்க வேண்டும் என்கிற தன் ஆசையை வரலட்சுமியிடம் சொல்லியிருக்கிறார் நிக்கோலய் சச்தேவ். அவரின் ஐடியா வரலட்சுமிக்கு பிடித்துப் போகவே, தாராளமாக உங்கள் விருப்பப்படியே திருமணத்தை நடத்தலாம் என கூறிவிட்டாராம்.
இதையடுத்து தாய்லாந்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்திருக்கிறாராம் நிக்கோலய். நிச்சயதார்த்தத்தை போன்றே திருமணத்திலும் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் சிலரும் தான் கலந்து கொள்கிறார்களாம்.
திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். திருமணத்தை வெளிநாட்டில் நடத்தினாலும் ரிசப்ஷனை சென்னையில் நடத்துகிறார்களாம். அதுவும் இரண்டு ரிசப்ஷனாம். இரண்டுமே ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கிறதாம்.
சென்னையில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹர்திக் பாண்டியாவின் சொத்துமதிப்பு ரூ. 91 கோடி: விவாகரத்தால் அதில் எத்தனை கோடி இழப்பார் தெரியுமா?
இது நிக்கோலய் சச்தேவின் இரண்டாவது திருமணமாகும். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி வளர்ந்த மகள் இருக்கிறார். மனைவியை பிரிந்த பிறகே வரலட்சுமி மீது நிக்கோலய் சச்தேவுக்கு காதல் வந்திருக்கிறது. அந்த காதலை இருவீட்டாரும் ஏற்கவே மும்பையில் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடத்தினார்கள்.
நிக்கோலய் சச்தேவின் மகளை தன் மகளாக ஏற்றுக் கொண்டுவிட்டார் வரலட்சுமி. அவரின் இந்த குணம் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தன் அப்பாவின் இரண்டாவது மனைவியான ராதிகாவை ஏற்றுக் கொண்டார் வரலட்சுமி. தன் சித்தி ராதிகாவுடன் நெருக்கமாக இருக்கிறார். நிச்சயதார்த்தத்தில் ராதிகாவையும், வரலட்சுமியின் அம்மாவையும் சேர்த்துப் பார்த்த ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த புகைப்படங்களை பார்த்து பலரும் வரலட்சுமியை வாழ்த்திய நிலையில் சிலரோ நிக்கோலய் சச்தேவின் உருவத்தை கேலி செய்தார்கள். அதை பார்த்த வரலட்சுமி என் கண்களுக்கு நிக்கோலய் மிகவும் அழகாக தெரிகிறார் என கூறி தன் வருங்கால கணவரை உருவக்கேலி செய்தவர்களுக்கு நெத்தியடி கொடுத்தார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்
வரலட்சுமியை மணமகளாக பார்க்க அவரின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் அந்த நாள் வெகுதொலைவில் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. ஜூலை மாதம் 2ம் தேதி நிக்கோலய் சச்தேவின் மனைவியாகிறார் வரலட்சுமி என தகவல் கிடைத்திருக்கிறது.
தங்களின் திருமணம் டெஸ்டினேஷன் வெட்டிங்காக இருக்க வேண்டும் என்கிற தன் ஆசையை வரலட்சுமியிடம் சொல்லியிருக்கிறார் நிக்கோலய் சச்தேவ். அவரின் ஐடியா வரலட்சுமிக்கு பிடித்துப் போகவே, தாராளமாக உங்கள் விருப்பப்படியே திருமணத்தை நடத்தலாம் என கூறிவிட்டாராம்.
இதையடுத்து தாய்லாந்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்திருக்கிறாராம் நிக்கோலய். நிச்சயதார்த்தத்தை போன்றே திருமணத்திலும் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்கள் சிலரும் தான் கலந்து கொள்கிறார்களாம்.
திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். திருமணத்தை வெளிநாட்டில் நடத்தினாலும் ரிசப்ஷனை சென்னையில் நடத்துகிறார்களாம். அதுவும் இரண்டு ரிசப்ஷனாம். இரண்டுமே ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கிறதாம்.
சென்னையில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹர்திக் பாண்டியாவின் சொத்துமதிப்பு ரூ. 91 கோடி: விவாகரத்தால் அதில் எத்தனை கோடி இழப்பார் தெரியுமா?
இது நிக்கோலய் சச்தேவின் இரண்டாவது திருமணமாகும். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி வளர்ந்த மகள் இருக்கிறார். மனைவியை பிரிந்த பிறகே வரலட்சுமி மீது நிக்கோலய் சச்தேவுக்கு காதல் வந்திருக்கிறது. அந்த காதலை இருவீட்டாரும் ஏற்கவே மும்பையில் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடத்தினார்கள்.
நிக்கோலய் சச்தேவின் மகளை தன் மகளாக ஏற்றுக் கொண்டுவிட்டார் வரலட்சுமி. அவரின் இந்த குணம் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தன் அப்பாவின் இரண்டாவது மனைவியான ராதிகாவை ஏற்றுக் கொண்டார் வரலட்சுமி. தன் சித்தி ராதிகாவுடன் நெருக்கமாக இருக்கிறார். நிச்சயதார்த்தத்தில் ராதிகாவையும், வரலட்சுமியின் அம்மாவையும் சேர்த்துப் பார்த்த ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.