சிவகாசி குடோன்களில் ஆய்வு
சிவகாசி பகுதியில் தொடர் பட்டாசு வெடி விபத்துகளை அடுத்து, தனி வட்டாட்சியர் தலைமையில் பட்டாசு ஆலை, குடோன்களில் ஆய்வு. தாயில்பட்டி கிராமத்தில் உள்ள குடோனில் உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பேரியம் நைட்ரேட் 455 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிப்பு. குடோன் உரிமையாளர் மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து, 22 டன் பேரியம் நைட்ரேட் வேதிப்பொருளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.